You are in the desired Language

Sunday, January 4, 2015

ஓவியம் வரைவதற்கு மென்பொருள்

கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான brushes கொடுக்கப்பட்டுள்ளன.
Photoshop போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள Blur, Sharpness, Burn, Smudge  டூல்களும் லேயர் வசதியும் இதில் உள்ளது.
எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்க முடியும்.
மென்பொருள் பதிவிறக்கம் செய்ய – http://www.smoothdraw.com/

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக

புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம். இது support செய்யும் பைல்கள் JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000.

அதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்கி அல்லது விரித்து தேவையான பெயர் கொடுத்து மாற்றி சேமித்துக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு படமாக Photoshop போன்ற மென்பொருள்களில் திறந்து அதை edit  செய்வதைக் காட்டிலும் இம்மென்பொருளைக் கொண்டு ஒரு கோப்பறையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றி நாம் சேமித்துக்கொள்ளலாம்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு Photo Gallery அமைப்பதற்கு 500X400 px அளவிற்கு படங்கள்(images) வேண்டும் எனில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையோ அல்லது இணையத்தில் எடுத்த புகைப்படங்களையோ ஒரு பொதுவான கோப்பறை ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வையுங்கள்.
பிறகு இம்மென்பொருளை open செய்ததும் தோன்றும் window-வில் புகைப்படங்கள் அடங்கிய கோப்பறையை தேர்ந்தெடுத்து புகைப்படங்களின் அளவுகளை(500pxX400px) கொடுத்து ok கொடுத்தால் போதும்.
மென்பொருளை தரவிரக்கம் செய்ய – http://www.faststone.org/FSResizerDetail.htm
thanksto: http://www.techtamil.com/

இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு

இணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான  வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.
2. அதன்பின் தோன்றும் window-வில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3. பின்னர் தோன்றும் window-வில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் pop up மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய – http://www.focalfilter.com/
Thanksto:http://www.techtamil.com/

Saturday, January 3, 2015

இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய முடியும்!

வீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.
சமீபத்தில், குழந்தைகளை கண்காணிக்க வீடுகளில் , பொம்மைகளில் வைக்கப்பட்ட வெப் காமிராக்களை ரசிய நாட்டு ஹேக்கர்கள் ஊடுருவி Live Streaming செய்து ஒரு பொதுவான வீடியோ தளத்தில் தெரியுமாறு செய்துவிட்டனர்.
வீட்டினுள் நடக்கும் விஷயங்கள் கிரிகெட் மேட்ச் மாதிரி live ஆ வெளியே தெரிந்தால் என்ன ஆவது? இந்த ஊடுருவலை மக்கள் விழிப்புணர்வு பெறவே தாங்கள் நடத்தியதாகவும். பலரும் தங்கள் மோடமின் Default Password ஐ மாற்றுவதில்லை., அல்லது யுகிக்ககூடிய எளிமையான கடவுச்சொல்லை வைக்கிறார்கள். இதே தகவலை பிரபல ஆன்ட்டி-வைரஸ் avast நிறுவன அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இணையத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் புதிது புதிதாக தினமும் கிக் ஸ்டார்ட்டர் (KickStarter) இணைய தளத்தில் கண்டுபிடித்து வெளியிடுகிறார்கள். அதிகமாக டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் வரும் போது அதை பாதுக்காக்கும் நடவடிக்கையும் நாம் எடுக்க வேண்டும்.
எல்லாம் சரி தான்., பல ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் தாங்களே வைரஸ் மென்பொருள்களை பரவவிட்டு, அதை அளிக்கும் மென் பொருளை விற்பது நமக்குத் தெரியும். இந்த டிஜிட்டல் வீட்டை பாதுகாக்க எங்களிடம் ஒரு தயாரிப்பு உள்ளது என புதிய சந்தையை இவர்கள் உருவாக்க உள்ளடி வேலை செய்கிறார்களோ என டெக் தமிழ் சந்தேகப்படுகிறது.

​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும்.
அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற கால்டாக்சி சேவை நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரு ஐபோன் அப்ப்ளிகேசன் தூக்கி சாப்பிட்டுவிட்டது அதன் பெயர் தான் “உபெர்” (UBER)  வெகு விரைவாக புக் செய்த கால் டாக்ஸி உங்களை பிக்கப் பண்ண வரும் என்ற வாசகத்துடன் , தொழில்நுட்ப திறன்களுடன் இந்த அப் வெளியிடப்பட்டது. குறைந்த காலகட்டத்தில் சுமார் 50 நாடுகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் உபெர் நிறுவனத்துடன் இணைந்து ஓட்டி வருகின்றனர்.
சமீபத்தில், இந்தியாவில் சென்னை உட்பட 11 நகரங்களில் தனது சேவையை துவங்கியுள்ள உபெர், இந்தியாவில் உள்ள தனது இருவகையான போட்டியாளர்களை சமாளிக்க பிரிட்டிஷ் கால தொழில் போட்டி முறையை கையாளுகிறது.
uber_seo_car

1. பிற மொபைல் கால்டாக்சி மென்பொருள்கள்
மக்கள் உபெர் மென்பொருளைத் தான் கால் டாக்சி புக் செய்ய பயன்படுத்த வேண்டும் என்பதற்காக. ஒருவர் அவரின் Credit Cardஐ “உபெர் வாலெட்” இல் சேமித்து வைத்தால் ரூபாய் 300 மதிப்பில், முதல் ஐந்து புக்கிங்களுக்கு விலைச் சலுகை வழங்குகிறது.
2. பிற நிறுவன கால் டாக்சி ஓட்டுனர்கள்
வாகன ஓட்டுனர்கள் தங்களின் கைபேசி மென்பொருளை எப்பொழுதும் திறந்தே வைத்திருப்பதற்கு ரொக்க ஊக்கத் தொகையை வழங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விரைவில் உபெரின் நேரடி வாகன ஓட்டிகளாக மாறுவர்.
3. அனைத்து நிறுவனங்களையும் விட விலையைக் குறைத்தல்
சொல்லப் போனால்., இந்தியாவில் மிகவும் விலையைக் குறைத்து  வேண்டுமென்றே உபெர் தனது கால் டாக்சி சேவையை நட்டத்தில் நடத்தி வருகிறது. இந்த குறைந்த விலை சலுகைகளால் மக்களிடம் உபெர் எனும் பெயர் பிரபலாமாக போய்ச் சேரும் எனும் ஒரே காரணத்திற்காக அதிக பணத்தை செலவு செய்கிறது. இந்திய நிறுவனங்களை முழுமையாக இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி தானே ஒரே பெரிய கால்டாக்சி நிறுவனமாக இருக்க பல முயற்சிகள் செய்து வருகிறது. முதலீடு பெற்று அதிக சலுகைகளை வழங்கும் இணைய வர்த்தக நிறுவனங்களைப் பற்றி நான் ஏற்கனவே டெக் தமிழில் எழுதியுள்ளேன். கடந்த ஜூன் மாதம் 7200 கோடி ருபாய் முதலீடு பெற்ற இந்த நிறுவனம் , அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாம் இடத்தில உள்ள இந்திய கால்டாக்சி சந்தையைப் பிடிக்க தனது முதலீட்டை தண்ணி போல் செலவு செய்து வருகிறது.
ஐபோன் , ஆண்ட்ரைடு , விண்டோஸ் கைபேசிகளில் உபெர் அப்ப்ளிகேசன் நிறுவிக்கொள்ளலாம். விரைவில் அதிக இந்திய / தமிழக நகரங்கள் மற்றும் டெபிட்கார்டு , நெட் பாங்கிங் வகை பணப் பரிமாற்றமும் மென்பொருளில் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.



Thanks to : http://www.techtamil.com/